Current Events Prelims Plus
1நீர் பகிர்வு: துங்கபத்ரா மாதிரி குறித்த பார்வை
துங்கபத்ரா அணையில் புதிதாக நிறுவப்பட்ட 33 உபரி நீர் வெளியேற்றும் மதகுகள் (spillway crest gates) சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டன.
துங்கபத்ரா அணை திறப்பு விழாவில், கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் ஆகியோர் மாநிலங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
தென்னிந்தியாவின் மூன்று மாநிலங்களில் பாசனத்திற்கு துங்கபத்ரா அணை மிக முக்கியமானது:
கர்நாடகா: 9.26 லட்சம் ஏக்கர்
ஆந்திரப் பிரதேசம்: 6.25 லட்சம் ஏக்கர்
தெலுங்கானா: 87,000 ஏக்கர்
ஆகஸ்ட் 2024-ல், அதிக நீர்வரத்தின் போது ஏற்பட்ட மதகு பழுது, உள்கட்டமைப்பின் பலவீனங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
தோற்றம் - கர்நாடகாவின் ஷிமோகா (Shivamogga) அருகே உருவாகும் இநத ஆறு, சுமார் 531 கி.மீ தூரம் பாய்ந்து, ஆந்திரப் பிரதேசத்தின் சங்கமலேஸ்வரம் (Sangamaleshwaram) என்னுமிடத்தில் கிருஷ்ணா நதியுடன் இணைகிறது.
பின்னர் ஒன்றிணைந்த நீர் கிழக்கு நோக்கிப் பாய்ந்து ஹம்சலாதேவி (Hamsaladeevi) என்னுமிடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
பாயும் பாதை - 382 கி.மீ கர்நாடகாவிலும், 58 கி.மீ கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்திற்கு இடையிலான எல்லையாகவும், 91 கி.மீ ஆந்திரப் பிரதேசத்தின் வழியாகவும் பாய்கிறது.
துங்கபத்ரா அணை ஒரு முக்கியமான பன்னோக்கு, மாநிலங்களுக்கு இடையிலான திட்டமாகும்; இது கர்நாடகாவின் ஹோஸ்பேட் (Hosapete) அருகே துங்கபத்ரா ஆற்றின் (கிருஷ்ணா ஆற்றின் முக்கிய துணை ஆறு) குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
2மயில்சாமி அண்ணாதுரை தலைமையிலான பள்ளிப் பாடத்திட்டக் குழு சீர்திருத்தம்
தமிழ்நாட்டில் பள்ளிப் பாடத்திட்டத்தை வடிவமைப்பதற்காக, முன்னாள் இஸ்ரோ (ISRO) விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் புதிய பாடத்திட்ட வடிவமைப்புக் குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளிப் பாடத்திட்டத்தை வடிவமைப்பதற்காக, முன்னாள் இஸ்ரோ (ISRO) விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் புதிய பாடத்திட்ட வடிவமைப்புக் குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டம் படிப்படியாக மாற்றப்பட்டு வருகிறது.
கடந்த திமுக ஆட்சியின் போது, புதிய பாடத்திட்டத்தை வடிவமைப்பதற்காக உயர்மட்டக் குழு மற்றும் நிபுணர் குழு ஆகியவை அமைக்கப்பட்டன; இதில் இஸ்ரோ தலைவர் நாராயணன், கிரிக்கெட் வீரர் அஸ்வின், விஞ்ஞானி டி.வி. வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.
பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில் இதன் தலைவராக நியமிக்கப்பட்டார்
தற்போதைய பாடத்திட்டம், பாடப்பொருள் விவரம் (syllabus), மதிப்பீட்டு முறைகள் மற்றும் கற்பித்தல் அணுகுமுறைகளில் செய்யப்பட வேண்டிய மாற்றங்களை இக்குழு ஆய்வு செய்தது.
மேலும், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துகளைப் பெற்றது.
பள்ளி கல்வியை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள் மற்றும் புதிய பாடத்திட்டத்திற்கான அறிக்கை ஆகியவற்றைத் தயாரித்து அரசாங்கத்திடம் சமர்ப்பித்தது.
இதனைத் தொடர்ந்து, முதல் கட்டமாக நடப்பு கல்வியாண்டில் 1 முதல் 3-ஆம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மயில்சாமி அண்ணாதுரை ('இந்தியாவின் நிலவு மனிதர்' / Moon Man of India)
இவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) 36 ஆண்டுகள் பணியாற்றி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 60-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களின் உருவாக்கத்தில் பங்காற்றினார்.
இஸ்ரோவின் மிக முக்கியமான சாதனைகளான சந்திரயான்-1 மற்றும் மங்கள்யான் (நிலவு மற்றும் செவ்வாய் கிரகங்களுக்கான பயணங்கள்) ஆகியவற்றில், முறையே திட்ட இயக்குநர் மற்றும் நிகழ்ச்சி இயக்குநராகப் பணியாற்றினார்.
மேலும், 'நாவிக்' (NAVIC) செயற்கைக்கோள் அமைப்பைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வருவதிலும் இவர் முக்கிய பங்காற்றினார்.
'கையருகே நிலா' (The Moon is Within Our Reach) என்ற நூல்.
பத்மஸ்ரீ விருது, 2016.
3.உலக சிறுகோள் தினம் (ஜூன் 30)
1908-ஆம் ஆண்டு ஜூன் 30 அன்று சைபீரியாவின் வான்பகுதியில் நிகழ்ந்த மிகப்பெரிய சிறுகோள் வெடிப்புச் சம்பவத்தின் (asteroid airburst) நினைவு நாளாக இத்தினம் அமைகிறது.
இந்த நிகழ்வு சுமார் 2,150 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான காடுகளை அழித்தது.
பூமிக்கு அருகில் வரும் விண்வெளிப் பொருட்களால் (NEOs) ஏற்படும் தொடர் அச்சுறுத்தல் மற்றும் அறிவியல் ஆராய்ச்சியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, 2016-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை இத்தினத்தை அதிகாரப்பூர்வமாக 'சர்வதேச சிறுகோள் தினம்' என்று அறிவித்தது.
சிறுகோள்கள் (Asteroids)
சிறுகோள்கள் என்பவை பாறை மற்றும் உலோகத்தால் ஆன விண்வெளிப் பொருட்கள் ஆகும்
இவை 'குறுங்கோள்கள்' (minor planets) என்றும் அழைக்கப்படுகின்றன.
இவை முக்கியமாக செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கு இடையே உள்ள 'முதன்மைச் சிறுகோள் மண்டலத்தில்' (Main Asteroid Belt) காணப்படுகின்றன.